வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்

சிகரம் ,சிரம் என்றால் என்ன பொருள் என்பதை நாம் அனைவரும் அறிந்தது தான்.
இந்தச் சொற்களிலிருந்து உருவான சொற்கள் தான் எத்தனை ? .
1.சீப்பு- தலை முடியை வாரவதற்கு
2.சவுரி -செயற்கை முடி
3.சீக்காய்- தலை முடியை பாதுகாக்க உதவுவது
4.சிகையலங்காரம் -தலை அலங்காரம்
5.சீம்பூ -தலை முடியை பூ போன்று வைப்பது ( Shampoo )

இப்படி உருவாகும் சொற்கள் உருவாக்கும் இன்பமே தனிந்தான்.
வேரிலிருந்து செடி வளர்ந்து காய் வந்து, கனி கொடுக்கும்பொழுது தான் சுவையும் அதிகமாக இருக்கும்.சிகரம் என்ற பொழுது நினைவிற்கு வரும் ஒரு சொல் தான் " சென்னி ". அது தலை, உச்சி என்று பொருளில் இலக்கியங்களில் வரும்.சென்னை என்று பெயரிட்டப் போது என் நினைவிற்கு வந்து இது தான். சென்னி என்றால் தலை என்னும் பொழுது , மாநிலத்தின்
தலைநகரை சென்னை என்று தான் அழைக்கவேண்டும்.

இந்தப் பகுதியை ஆண்டு வந்த நாயக்க மன்னன் தன் தந்தையின் நினைவாக இட்டப் பெயர் தான் "சின்னப்பட்டணம்" சென்னப் பட்டணமாகி, சென்னைப் பட்டணம் என்றாயிற்று என்று
சென்னை பெயர் வந்தக்கதை என்று படித்தது உண்டு.

" மதராசு " என்ற சொல்லுக்கு ஒரு விளக்கம் கூறுவது உண்டு.கோட்டை கொத்தளங்களுடன்
இருந்தது பகுதி என்பதாலும், தமிழில் கோட்டை என்பதற்கு மதில் என்ற சொல்லுண்டு. இந்தப் பகுதி தெலுங்குப் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், மதில் என்பது தெலுங்கில் மதுரு என்று
அழைக்கப் படும்.அதிலிருந்து மதராசு என்று வந்தது என்று கூட சொல்லுவது உண்டு.

எனக்கு சென்னி என்றால் தலை என்னும் பொழுது , மாநிலத்தின் தலைநகரை சென்னை என்று தான் வந்திருக்க வேண்டும் என்பதே சரி என்று தோன்றுகிறது.

புதையல்