வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கல்கண்டு கவிதை

கல்கண்டு




சருகாகும் வரையிலும்
மணம் வீசி வாழும்
மகிழ்ச்சியைக் " கல் "
பூக்களைக் " கண்டு "






கரையைத் தொடுவதில்
வெற்றியோ தோல்வியோ
விடா முயற்சியைக் " கல் "
நீர் அலையைக் " கண்டு "






தேய்வதால் கவலையில்லை
என்றாவது பெளர்ணமியாகும்
நம்பிக்கையைக் " கல் "
நிலவைக் " கண்டு "





சுட்டெரிக்கும் சூரியனையே
தொட்டுவிடத் துடிக்கும்
துணிச்சலைக் " கல் "
பீனிக்சு பறவையைக் " கண்டு "





பாறையே ஆனாலும்
மோதிச் சிதைக்கின்ற
உறுதியைக் " கல் "
உளியினைக் " கண்டு "





வேர்கள் இருந்தாலும்
விழுதுகள் ஊன்றும்
எச்சரிக்கையைக் " கல் "
ஆலமரத்தைக் " கண்டு "

( படித்ததில் பிடித்தது - சி.கருணாகரசு அவர்களின் வரிகள் )