வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

இனிப்பான கற்கண்டிலுள்ள கசப்பான உண்மை ( கண்டி- Candy )




" கற்கண்டு " , " நூற்கண்டு " நாம் நாளும் சொல்லும் சொல். இவற்றோடு உறவுடையவையே
" உப்புக்கண்டம் " , தயிர்க்கண்டம் " என்பனவும். இந்தக் கண்டு - கண்டம் என்னும் சொற்களுக்கு உருண்டு திரண்டது என்பதே மூலப்பொருள். சீனிப்பாகு உருகி இறுகிக் கல்லானது. நூல் தனித்தனி இழையாக இருந்தது பந்தாகச் சுற்றப்பட்டு உருண்டையானது, இது
நூற்கண்டு எனப் பெயர் பெற்றது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியில் உப்பினைச் சேர்த்துக் காய வைத்து எடுத்துக் கொள்கின்றோம். இது உப்புக்கண்டம். தண்ணீர் போல் இருந்த பால் பிரை குற்றியவுடன் கட்டித்தயிரானது. இதுவே தயிர்க்கண்டம்.

ஒன்றோடு ஒன்றாய் இறுகிச் சேர்ந்த பொருள் தனிப்பொருளாகத் தனித்தனி பகுதியாக வேறொன்றி லிருந்து பிரிந்துவிடும். இதன் வழியாகத்தான் இந்த மண்ணுலகில் தனியாகப் பிரிந்திருக்கும் நாட்டுப் பகுதிகள் இந்தியத் துணைக்கண்டம், அமெரிக்காக் கண்டம் எனக் கண்டப் பெயரால் அழைக்கப்பட்டன.



ஒரு நூலில் அமைந்த தனித்தனி உட்பகுதிகள் கூட இந்த வகையில் தான் கண்டம் - காண்டம் எனப்பட்டதும்.

கரும்பைச் சாறு பிழிந்து வெல்லம் செய்கிறோம். இந்த வெல்லப்பாகு இறுகியதும் சருக்கரைக் கட்டி என்று பெயர் பெறுகிறது. இந்தச் சருக்கரைக் கட்டி உருண்டு திரண்டிருப்பதால் " சருக்கரைக் கண்டி " என்றும் வழங்கப் பெறுகிறது. கண்டமாய் இருப்பது கண்டியாகும். அதாவது உருண்டு திரண்டிருப்பது என்பது இதற்குப் பொருள்.

தமிழில் தோன்றிய இந்தச் " சருக்கரைக் கண்டி " என்னும் பொருள் ஆங்கிலத்தில் " Candy "
என்று அப்படியே அழைக்கப்படுகிறது. பிரெஞ்சு,இத்தாலி,பெர்சிய,அரபு என்று மேலைமொழிகள் பலவற்றிலும் சருக்கரைக் கண்டி " Sugar Candy " , " Succhero Candy " என்பனவாகச் சொல்லப்பட்டு வருகின்றன.

இனிப்பான இந்தக் கண்டிச் சொல்லில் கசப்பான உண்மை ஒன்றிருப்பது என்னவென்றால் மாமேதை கீற்று ( SKEAT ) போன்றோர் கூட இச்சொல்லின் மூலமறியாமல் கூறியிருப்பதுதான்.

Candy - to crystallise ; (F., Ital., Pers ) F. se candir, - to candie ; Cot., Ital. candire - to candy ; Ital. candi - candy; succero candi - sugar candy; Pers. and Arab. quand, sugar - candy; Whence; Arab. qundi. - made of sugar. The word ia Aryan ( Pers ) ; cf . Skt. khandava - sweetmeats; Khanda - a broken piece.

(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )