வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1

நடுநிசியில் குழந்தையின் சத்தம்
கணவனுக்கு கிடைக்கவில்லை
மனைவியின் ஆசை முத்தம்






சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்.








தூரிகையெடு துளி மைத் தொடு
உயிரைத் தந்து உணர்வைக் கலந்து
ஓவிய மாக்கிக் கொடு.





நீரின்றி காயும் ஆறு
நித்தம் மணலெடுத்து குழி பறிக்கும்
மணல் வண்டி நூறு.





குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.