வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 4

சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.









யானையின் பலம் தும்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி கிட்டும் வரையில்
நமக்கு வேண்டும் நம்பிக்கை.






வங்கிகள் கொடுக்கும் கடன்
வட்டிக் கணக்கை பார்த்த பின்னே
வேதனை வந்திடும் உடன்.





தஞ்சையில் அன்று தானியம்
செழித்தது காவிரி இன்று மணலாய்
உழவன் கெஞ்சுவது மானியம்.





குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.