வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1




ஆதிவாசியாக அலைந்த மாந்தனுக்கு இரவோ அச்சத்தைத் தந்தது, பகலோ பயத்தைப் போக்கியது. காலையில் எரிந்து மாலையில் அணையும் தீயாக தான்
கதிரவன் அவன் கண்ணுக்குக் காட்சி அளித்தது. இப்படி இருட்டை விலக்கி ஒளியை அளித்த பகலவனை ஆதிமாந்தன் கடவுளாக காண ஆரம்பித்தான்.



இப்படி தான் தீ என்பது அவனின் தெய்வம் ஆனது.

தீ-தெய்- தெய்வம்
தீ-தே- தேவு- தேவன்

இதனை ஒவ்வொரு மொழியிலும் காணலாம்.

இலத்தீனில் - deus
சமசுகிருத்தில் - deva
செர்மனில் - tiwaz, tyr
பாலி மொழியில் - தீயுத்
பிராகிருத மொழியில் - Joi, Jyot

முதலில் நெடில் தோன்றி தான் குறில் தோன்றியது என்று சொல்லப்படும்.

அதைக் குழந்தைகளின் , கன்றுகளின் மொழிகளில் காண முடியும்.

இதனால் தான் ஆ என்பதற்கு முதல், தொடக்கம் என்று பொருள் உண்டாயிற்று.

தீயைக் காணும்போது அது பயத்தினால் மட்டுமல்ல பார்த்தாலே வருவது, "ஆ! தீ " அல்லது " ஐய்யோ ! தீ " என்பது தான். ஏனென்றால் காலையில் எழுந்தயுடன் ஆதிமாந்தன் கண் முன்னே கண்ட காட்சி
அந்தத் தீ ( கதிரவன் ). தான்

அந்தத் தீ அதாவது காலை கதிரவனை ( கடவுளை )ஆதீ என்று அழைக்க ஆரம்பித்தான்.

அந்தத் + தீ அல்லது ஆ + தீ = ஆதீ

ஆதீ - ஆதி

இப்படி தான் ஆதி என்ற சொல் பிறந்தது. அது ஒரு தமிழ்ச்சொல் தான்.

(ஆதி = காலையில் தோன்றும் கதிரவன் அல்லது கடவுள் )

உழவிற்கும் வாழும் உலகிற்கு ஒளியை அளித்த கதிரவன் ஆதிபகவன் எனப்பட்டான்.

கதிரவன் காலையில் தொடங்கி, மாலையில் மறையும் வரையான பொழுதை அழைக்க சொல் தேவை பட்டது. அப்பொழுதும் அவனுக்கு அந்தத் தீ தான் நினைவிற்கு வந்தது. இப்படி தான்

தீ- தீனம்-தினம்

என்றும் சொல் தோன்றியது.

இதை உலக மொழியில் அனைத்திலும் காணலாம்.

Dies - இலத்தீனில்
Dydd - வேல்சு மொழியில்
Day - ஆங்கிலத்தில்
Dygn - சுவீடன் மொழியில்
தர்ரோஜ் - குசராத்தியில்


உண்மையில் Day என்பதற்கு அகராதி அளிக்கும் பொருள் "The time between sunrise and sunset " or "half of the day that is not night " இதை Daytime என்னும் சொல்லில் பார்க்கவும்.

ஆனால் அது பொருள் மாறி 24 மணி நேரத்தையும் அதாவது முழுநாளையும் குறித்தது. On which day? என்று சொல்லக் காணலாம். ( मेरा जन्म दिन्- இந்தியில் )


தொடரும்..............

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப் பட்டது )

புதையல்