வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2

முதல் பாகம்




காலையில் தோன்றும் கதிரவனைக் கண்ட மாந்தன் அதை ஆதி என்று அழைத்தான்.மாலையில் அந்தத் தீ (கதிரவன்) அணைவதை(மறைவதை)க் கண்டான்.



இப்பொழுது அமைதி என்ற சொல்லைப் பார்ப்போம். எவ்வித சலனமின்றி, சத்தமின்றி இருக்கும் நிலையை அமைதி
என்கின்றோம்.ஆனால் அதற்கு உண்மையான பொருள் அது அன்று.




மகாத்மா காந்தி அவர்கள் " ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம் ,அதற்காக அமைதி இருக்கிறது; மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது பொருள் அன்று " ஒருமுறை சொன்னதாக நினைவு.



இன்று ஈழத்தில் அமைதி நிலவின்றது என்பதற்காக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று பொருள் இல்லை.



அப்படி என்றால் அமைதியின் உண்மையான பொருள் என்ன ? ஆனந்தம் இருக்க வேண்டும்; அழகு இருக்க வேண்டும்; ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது தான்.




இதை இன்னும் விளக்கமாக விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரின் Peace என்னும் தலைப்பில் கவிதை வரிகளைப் படித்துப் பாருங்கள். ( மொழியாக்கம் jataayu அவர்கள் )




அறிந்து கொள் நண்பா
ஆற்றலிடம் மட்டுமே வரும்
அமைதி

சக்தியாய்த் தோன்றாத சக்தி
இருளில் இருக்கும் ஒளி
ஒளிப்பிழம்பின் நிழல்
அமைதி

பேசாத பேருவகை
சோகப் படாத பெரும் துக்கம்
வாழாத அமர வாழ்வு
அஞ்சலி பெறாத முடிவில்லா மரணம்
அமைதி

இன்பமும் அல்ல துன்பமும் அல்ல
இடைப்பட்டது அமைதி
இரவும் அல்ல பகலும் அல்ல
இவற்றை இணைப்பது அமைதி .

அமைதி என்பதற்கு அழகான, சத்தமற்ற என்ற பொருள் விளக்குகிறது.மேலும் அம் என்பதற்கு (சத்தம்)அற்றுப் போன மற்றும் அழகு என்பதும் விளங்குகிறது.



அம்மணம் என்கின்றோம். அப்படி என்றால் ஆடையற்ற நிலையைத் தானே.இங்கும் அம் என்பதற்கு அற்றது என்பது பொருள் விளங்குகிறது. அம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு. அதனால் தான் அதை இரசிக்க விழைக்கின்றோமோ ???????!!!!!!!!!!.




அம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு தமிழில் . அதை விளக்கமாக விரிவாக காண்போம்.

அம்புலி - அழகுடைய நிலவு

அம் + உலி = அம்புலியாற்று ; உல் - உல - உலி என்க ; உலா வரும் நிலவு என்பதே.

அம்முலி என்ற மூலச்சொல், தொன்மை காலச்சொல் அம்புலியாற்று.



அம்பனத்தி = அழகிய கொற்றவை

அம்பட்டன் = அம் + பட்டன்

நாடி பார்ப்பதற்குப் பயன் பயன்படுத்தப்படும் பட்டுத்துணியைக் கையில் வைத்திருப்பவன்.
மருத்துவன் தாழ்ந்த சாதி என்பது இனக்கொழுப்பால், அதிகாரத்தை அடைய நினைத்தவர்களால் ஏற்பட்டது.அந்தணர்கள்,செல்வந்தர்களுக்கு நாடி பார்க்க பட்டுத்துணியை கையில் விரிக்கும் பார்க்கும் வழக்கமிருந்தது.

அழகிய பட்டுத்துணியை வைத்து நாடி பார்த்தவன் அம்பட்டன் எனப்பட்டான். அம்பட என்பது இச்சொல்லின் திரிச்சொல்லாகும்.

அம்பட்டன் என்பது அழகான மீன் பெயராகும்.




இவ்வாறு அம் என்பதற்கு அழகு என்னும் பொருளில் தமிழில் சொற்கள் உருவாயின.

பொத்தானை அமுக்கு என்று சொல்ல கேட்கின்றோம்.



இன்னும் காலை அமுக்கு, கையை அமுக்கு,விளக்கு அணைந்து(அமுங்கி)ப் போச்சு என்று விளம்புக்கின்றோம்.
இன்று உள்ள சூழ்நிலையில் ஆயிரம் சிக்கல்கள் அமுக்க, அதை அமைதியாக அழகான தீர்க்கத் தெரியாமல் அழுத்தத்திற்கு (depression) ஆளாகின்றோம்.



அமுக்கமாக இருத்தல் என்றால் வெளியே செய்தியை வராமல் இருத்தல் என்று பொருள்.

இப்படி சொல்வதிலிருந்து விளங்குவது இது தான்.

அமுக்க அதாவது அம் என்பதற்கு மறைவது அல்லது உள்ளே என்பதே பொருள்.




மாலை கதிரவன் மறைவதையும் உள்ளே சொல்வதைப் போன்ற உணர்வை உணர முடிகிறது.

அந்தக் காலை கதிரவனை விட மாலை கதிரவன் தான் அழகாக, அமைதியாக,மறைவதைக்
கண்முன்னே கண்ட ஆதிமாந்தன்




அந்தத் தீ அதாவது மாலை கதிரவனை

அம் + தீ = அம்தீ = அந்தீ = அந்தி என்று அழைத்தான்.

மாலை கதிரவனை அழைத்த அந்த அந்தி என்னும் சொல் பிறகு கதிரவன் மறையும் பொழுதைக் குறித்தது.

அம்+தீ+பொழுது = அந்திப்பொழுது

இப்படி தான் கதிரவனின் மாலைப்பொழுது அழைக்கப்பட்டது.


இந்தச் சொற்களில் எத்தனை அழகான, ஆழமான பொருள் உள்ளது.
ஒரு முறை சொல்லிப் பாருங்கள் !!!

காலையில் தோன்றும் கதிரவன் = ஆதி

மாலையில் தோன்றும் கதிரவன் = அந்தி

எப்படி இனிக்கிறது நம்முடைய தமிழ்
என்பதைப் பாருங்கள் !!!!!!!!!!!


தீயில் தோன்றிய தீந்தமிழ்ச்சொற்கள் இன்று பொருள் மாறி

ஆதி என்பது ஆண்டவனையும், அந்தி என்பது மாலைப்பொழுதைக் குறித்தாலும், இதற்கு எல்லாம் அடிப்படை தீ என்னும் எனப்பட்ட கதிரவன் தான்.

காலையில் தோன்றும் கதிரவனைத்தான் ஆதிமாந்தன் எழுந்தயுடன் கண்டது, அதனால்
அதுவே First அதாவது ஆதி என்னும் சொல்லும் உண்டாயிற்று.

மாலையில் தோன்றும் கதிரவனை உறங்கும் முன் கண்டான். அதனால் அதுவே Last அதாவது அந்தி என்னும் சொல்லும் உண்டாயிற்று.

ஆதி அந்தமில்லா அருட் சோதியே என இறைவனைப் பாடுவது, தொடக்கமும் முடியுமில்லாத இறைவனைப் பற்றியே என அறியலாம்.

இதை வேதாத்திரி மகரிசி அவர்கள் அருமையாக சொல்வதைக் காணலாம்.

இதுவரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக் கூடியவனும், எண்ணக் கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார் என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான் பாருங்கள். இதுதான் ஆறாவது அறிவு. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்நிலை ஆறாவது அறிவு.

கடலில் இருந்த தண்ணீர் தான் மேகமாகி மழையாகப் பொழிகிறது. அருவியாக, ஆறாக ஓடும் தண்ணீர் மீண்டும் எங்கே சென்று சேர்கிறது? கடலில் தானே? குளமாக, ஏரியாக அந்த நீரைத் தேக்கி வைத்தாலும் புடைத்துக் கொண்டே இருக்கும் அது. கரை உடைந்தால் தன் மூலமான கடலை நோக்கியே விரைந்தோடும். கடலை அடையும்வரை அதற்கு ஓய்வு, அமைதி இல்லை.

இதுபோன்றே, மெய்ப்பொருளே (பிரம்மமே) அணுவாக, பஞ்ச பூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. அவையெல்லாமே இடைநிலை தான். இனி மனிதன் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை, தான் பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது. எதை அடைய வேண்டுமோ அதை அடையாதவரை வேறெது கிட்டினும் மனக்குறை மனிதன் உள்ளத்தில் தலையெடுத்துக் கொண்டே தான் இருக்கும். அடைய வேண்டியதை அடைந்து அமைதி பெறுவோம்.

எத்தனை உண்மை பாருங்கள் !!!!!!!!!!!!!!


உள்ளம் அமைதி அடையும் போது
இல்லத்திலும்
இதயங்களிலும்
இவ்வுலகில் மகிழ்ச்சி நிலவுகிறது.


இனி யாரும் ஆதியும், அந்தியும் அன்னிய மொழிச் சொற்கள் என்று சொல்ல வேண்டாம்.
அத்தனையும் அழகான அன்னைத்தமிழ்ச்சொற்களே.

இன்னும் தொடரும்..............

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வை உங்களுக்கு விளக்கமாக, விரிவாக அடியேனால் எழுதப்பட்டுள்ளது. )

புதையல்