வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 3

முதல் பகுதியைப் படிக்க , பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்

இரண்டாம் பகுதியைப் படிக்க, பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்





சுகவா ரிதியே ! சுவையே ! பயனே !
இகபர வாழ்வின் இருப்பே ! - குகநாதா !
ஏங்கும் அடியாரின் ஏக்கம் தவிர்ப்பவனே !
நீங்கா நினைவானய் நீ !




நீயிருக்க என்னபயம் ? நீயிருக்க ஏதுபயம் ?
தாயிருக்கச் சேயழுமோ தண்ணருளே ? - நாயினேன்
செய்தபிழை போகவினிச் செய்யாமல் காத்திடுவாய் !
தெய்வயானை மன்னவா தேற்று !




தேற்றத் தெளிந்தேனே தெய்வமென நீயென்றே !
ஊற்றாய் உனைநினைக்க ஓயாதேன் ! - போற்றுமோர்
ஆற்றுப் படைதந்த அக்கீரன் ஆவேனோ ?
ஏற்றுமே காப்பாய் எனை !



எனையாளும் எந்தைபிரான் ஏரகத்துச் செட்டி !
வினைநீக்க வந்தவடி வேலா ! - நினையாயோ ?
போரூரில் வாழ்கின்ற புண்ணியனே ! கண்ணியனே !
காரூரும் தென்பழனி காப்பு !



காப்புக் குரியவனே ! கண்ணின் மணியானே !
பாப்புனையும் பைந்தமிழ் ஆனவனே ! - சேப்ப
விழிநீர் பெருக்கியுனை வேண்டுகின்றேன் வேலா !
பழிநீங்க வேண்டல் பணி !



பணிந்தாரை வாழ்விக்கும் பால முருகா !
அணிமா மயிலின் அழகா ! - தணிகை
மலைமேல் குடிகொண்ட மால்முருகா ! என்றன்
அலைபாயும் உள்ளம் அடக்கு !



இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.

புதையல்