வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

எமக்கு எவருமில்லையா ? சொல்லுங்கள் !!!


தாள்முழுக்கச் செய்திகள்; எம்மக் களைப்பற்றி
நாள்முழுக்கப் பேசுவோம் வாய்கிழிய மட்டும்;
அகலவில்லை துன்பங்கள் இன்னுமே இங்கு
நகர்வது நாட்கள்மட் டும்.










சொல்லியழ எங்களுக்கு வார்த்தையில்லைப், பாருங்கள்!
பால்மணம் மாறாத பாலகனைப் பாவிகளே!
உங்களுக்(கு) எப்படித்தான் ஈரமற்றுப் போனதோ
எங்களைக் கொன்றழிக் க!

************************************************

அழுது புலம்புகிறேன் நானிங்கே உன்னைத்
தொழுதென்ன புண்ணியம் ஆண்டவனே வேதனையைத்
தீர்ப்பாய் எனவுன்னை வேண்டினேன் வேடிக்கை
பார்க்கின்றாய் நீயன்றோ இங்கு!

****************************************

அடியேனையும் வெண்பா எழுதிய வைத்த அகரம் அமுதா அவர்களுக்கு நன்றிகள்

புதையல்