வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 4

பாக்களைப் பருக , படிக்க
1.முதல் ; 2.இரண்டாம் ; 3. மூன்றாம்





அடக்கும் உபாயம் அறிந்தேயான் வந்தேன் !
மடக்குற வள்ளி மணாளா ! - இடபால்
இருக்கின்ற தேவானை என்கின்ற காட்சி,
தருகின்ற இன்பம் தனி !




தனித்தெய்வம் நீயென்பேன் ! - தண்பரங் குன்றம்
இனித்த வகையறிவேன் எந்தாய் ! - குனித்த
புருவமும் செவ்வாய்க் குமிழ்ச்சிரிப்பும் கொண்ட
முருகா வருகவென் முன்.




முன்வரத் தீவினைதான் மூண்டெழு மாமுருகா ?
உன்வேலைக் கண்டவுடன் ஓடுமே ! - என்னிறைவா !
ஐயன் அருணகிரி ஆவேனோ என்பாயா ?
பையப் பெறுவேன் பணிந்து !



பணிந்து பணிந்து பகலிர வின்றித்
தணியா மனத்தைத் தருவேன் ! - அணிமா
மயிலும் அயில்வேல் படையும் உடையாய் !
உயிரில் கலந்த உணர்வு !



உணர்வில் கலந்தாய் ! உயிரில் கலந்தாய் !
கணபதியின் தம்பியே கந்தா ! - மணவழகா !
ஞானக் குழந்தையே ! நான்மறை நாயகனே !
ஊனக் குழந்தை உனக்கு !



உனக்கென்றும் நானடிமை ! உன்னைத்தான் விட்டால்
எனக்கென்றிங் காருந்தான் இல்லை ! - மனம்நிறைந்தாய் !
எங்கள் குலவிளக்கே ! எந்தை சிவபாலா !
தங்க மகனேநீ தாங்கு !



தாங்கும் தனிவேலும் தக்ககொடிச் சேவலுமே,
ஏங்கும் துயர்போக்கும் ஏதுக்கள் ! - ஓங்கு
பழமுதிர் சோலை மலைக்கிழவா ! நீதான்
அழவைக்க லாமோ அறி !




இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.

புதையல்