வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

எட்டப்பன் மார்கள் இருக்கும் வரை....



காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவும்
ஆட்சி அரியணை என்றே அலைகின்ற
எட்டப்பன் மார்கள் இருக்கும் வரையெல்லாம்
எட்டாக் கனியே எமக்கு!





இறைவா ! இவர்களுக்கு ஏனிந்த இன்னல் !
உறைவிடமும் இல்லை ! உணவும் இல்லை !
கரைவது கேட்கிறதா உந்தன் செவியில்
விரைந்து வழியென்று காட்டு.




ஆயுதம் தந்து பலனடைந்த நாய்களால்
தாயிழந்து தந்தையின்றி போயின சேய்களிங்கே
மண்ணில் இதயமற்ற இந்தியப் பேய்களால்
கண்ணீர்க் கதையான திங்கு.




புதையல்