வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

களம் ஒன்று ! கவிதை நூறு ! - 2



( மலர்விழி இளங்கோவன் அவர்கள் தலைமுறை இடைவெளி என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)

வடையைச் சுட்டது
பாட்டி என்கிறேன் நான்...

காக்கை என்கிறாய் நீ !

தலையாட்டுகிறேன்
மறந்தும் இவர்களிடம்
புன்செயில் என் தாத்தா
கடலை போட்டார்
என்பதை மட்டும்
சொல்லி விடக்கூடாது
என்று உறுதியோடு !


.............................................................................



(குகை மா.புகழேந்தி அவர்கள் கால விளக்கம் என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)


கைக்கிளைக்கும்
பெருந்திணைக்கும்
விள‌க்க‌ம் சொன்ன‌
தாத்தாவுக்கு
விள‌க்க‌ம் சொல்லிக்
கொண்டிருந்தான்
பேர‌ன்
கோமோவுக்கும்
லெஸ்பிய‌னுக்கும்

.................................................................