வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

நண்பனின் கல்லூரிக் கவிதைகள்



வருத்தம்


வீரப்பனின் வீராப்பு குறித்து
தேவாரத்திற்கு வருத்தம்

தேவாரத்தின் கெடுபிடியைக் கண்டு
வீரப்பனுக்கு வருத்தம்

காவிரியில் தண்ணீர் விடுவதைப் பற்றி
பட்டேலுக்கு வருத்தம்

காவிரியில் தண்ணீர் விடாததைப் பற்றி
கலைஞருக்கு வருத்தம்

மழை வரவில்லையென்று
விவசாயிக்கு வருத்தம்

மழை வந்து விட்டதே என்று
உப்பு விற்பவனுக்கு வருத்தம்

தான் மட்டும் உள்ளே இருக்கிறோம்
என்று "சசி"க்கு வருத்தம்

த‌ன்னையும் உள்ளே வைத்துவிடுவார்க‌ளோ
என்று "ஜெ"க்கு வ‌ருத்த‌ம்
வருத்தம் !
வருத்தம் !
வருத்தம் !

உன் கடைக்கண் பார்வை கிட்டவில்லை என்று
அனைவருக்கும் வருத்தம்

உன்னை காணவில்லையே என்று
எனக்கு மட்டுமே வருத்தம்



காதல்


புரியாதவன்
தாடி வளர்க்கிறான்

புரிந்தவன் இன்னொரு
லேடியைப் பார்க்கிறான்