வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3



காவலுக்குப் பூனை
கவிழ்ந்து கிடக்குது
சட்டி பானை






நிலவைத் தொட்ட விண்கலம் அங்கே
நீரிருப்பைச் சொன்னது
நீண்டவரிசையில் நிற்கும் மண்கலம் இங்கே






இறப்பும் இழப்பும் தந்தன காயங்கள்
இருந்தும் இருக்கின்றோம்
எல்லாம் காலச் சக்கரத்தின் மாயங்கள்





ஆண் ஆதிக்க அவலத்தால் பாஞ்சாலி
பந்தாயப் பொருளானாள் பாரதத்தில்
துகிலுரிந்த துச்சாதனனோ அங்கே பலசாலி






இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.