வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

எமக்கு எவருமில்லையா ? சொல்லுங்கள் !!!


தாள்முழுக்கச் செய்திகள்; எம்மக் களைப்பற்றி
நாள்முழுக்கப் பேசுவோம் வாய்கிழிய மட்டும்;
அகலவில்லை துன்பங்கள் இன்னுமே இங்கு
நகர்வது நாட்கள்மட் டும்.










சொல்லியழ எங்களுக்கு வார்த்தையில்லைப், பாருங்கள்!
பால்மணம் மாறாத பாலகனைப் பாவிகளே!
உங்களுக்(கு) எப்படித்தான் ஈரமற்றுப் போனதோ
எங்களைக் கொன்றழிக் க!

************************************************

அழுது புலம்புகிறேன் நானிங்கே உன்னைத்
தொழுதென்ன புண்ணியம் ஆண்டவனே வேதனையைத்
தீர்ப்பாய் எனவுன்னை வேண்டினேன் வேடிக்கை
பார்க்கின்றாய் நீயன்றோ இங்கு!

****************************************

அடியேனையும் வெண்பா எழுதிய வைத்த அகரம் அமுதா அவர்களுக்கு நன்றிகள்

எட்டப்பன் மார்கள் இருக்கும் வரை....



காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவும்
ஆட்சி அரியணை என்றே அலைகின்ற
எட்டப்பன் மார்கள் இருக்கும் வரையெல்லாம்
எட்டாக் கனியே எமக்கு!





இறைவா ! இவர்களுக்கு ஏனிந்த இன்னல் !
உறைவிடமும் இல்லை ! உணவும் இல்லை !
கரைவது கேட்கிறதா உந்தன் செவியில்
விரைந்து வழியென்று காட்டு.




ஆயுதம் தந்து பலனடைந்த நாய்களால்
தாயிழந்து தந்தையின்றி போயின சேய்களிங்கே
மண்ணில் இதயமற்ற இந்தியப் பேய்களால்
கண்ணீர்க் கதையான திங்கு.




அடைய நினைத்த கனவுகள்...




கிடந்துத் துடிக்கிற(து) என்னுடைய தேகம்
அடைய நினைத்த கனவுகள் அத்தனையும்
மண்ணில் புதைந்து மறைந்தே அழிவதைக்
கண்முன்னே காண்கின்றப் போது!









குண்டுகளின் சத்தத்தில் கேட்கவா போகிறது
ண்டுகளின் சத்தம் ? இரத்தம் வழிந்தோடும்
த்தக் களத்தில் அமைதி திரும்புமா ?
த்தமும் ஒய்ந்திடு மா ?