வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label சுடாத பழமா. Show all posts
Showing posts with label சுடாத பழமா. Show all posts

சுட்ட பழமா??? சுடாத பழமா???

( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி
அவர்கள் " சுயம் " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )



அவ்வைக்கும் தமிழுக்கும்
ஆயிரம் காலமாய் உறவுதான்...

தமிழ்க்கடவுளோடு
தர்க்கம் புரிந்து
சுட்ட கனி கொடுத்த‌
சூட்சுமம் இரசிக்கலாம் தான்...
என்றாலும்
தமிழ்ப்பாட்டி நினைவாக‌
தமிழ்க் கடவுள் சாட்சியாக‌
இன்றைக்கும் சிலர்
சுட்டகனிக்குப் பதிலாக‌
சுட்டகவிதை தருவதால்...
அப் போலிகளின் பெயரால்
ஏற்கனவே வெளிவந்த‌
எல்லா கவிதைகளின் மீதும்
எழுகிறது ஐயம்...
நம்மை...
சொக்க வைத்த பல கவிதைகள்
சுயம் தானா அல்லது
அவையும் இவைபோலவே
சுட்டவைதானா என்ற வினாவோடு!