வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label புதுமைத்தேனீ மா.அன்பழகன். Show all posts
Showing posts with label புதுமைத்தேனீ மா.அன்பழகன். Show all posts

புரிதல்...

இது எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் என் பா நூறு என்னும் நூலில் எழுதிய வரிகள்.
இதில் என்ன புதுமை என்றால் ஒரு கவிதையை இருவேறு வடிவங்களில் அதாவது புதுக்கவிதையிலும் மரபுக்கவிதையிலும் பார்க்க முடியும்.அவரின் வலைப்பூவில் இன்னும் பல அற்புதமான புதுக்கவிதைகளையும் மரபுக்கவிதைகளையும் படிக்கலாம்.



நான் புரிந்து கொண்ட‌
முதல் கவிதை - அன்னை

புரிய முயன்ற‌
கவிதை - அப்பா

புரிய முயன்று தோற்றுப் போன‌
கவிதை - மனைவி

புரியாமலேயே போன‌
கவிதைகள் - மக்கள்

நான் மட்டும் என்ன ?
புரிந்தும் புரியாத புதிர்தானே !



புரிந்த முதல்கவிதை பெற்றாள்; முயன்று
தெரிந்தவிடம் தந்தையே; தோற்றவிடம் இல்லாள்
புரியாமல் போன கவிதை புதல்வர்;
புரிந்தும் புரியாத நான்.