வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label மாதவன். Show all posts
Showing posts with label மாதவன். Show all posts

மார்கழித் திங்கள்



கொஞ்சி விளையாடும் கோகுலத்துக் கண்ணனைத்
தஞ்சம் அடைந்தாலே போதும் - மணிவண்ணன்
மஞ்சத்தில் பூங்கரத்தில் முத்தத்தில் வாய்ச்சொல்லில்
நெஞ்சம் நிறைந்தால்போ தும்





மகுவாய்ப் பிறந்தான், மகிழ்ச்சியைத் தந்தான்;
சுகந்தனாய் வந்தான், சுகத்தையெல்லாம் ஈந்தான்;
நகுலனாய் வாழ்ந்தான், நமையெல்லாம் வென்றான்;
முகுந்தனே முத்தமொன்று தா.

கண்ணா...



குழலென்றால் கண்ணன்; குறும்பென்றால் கண்ணன்;
நிழலென்றால் கண்ணன்; நினைவென்றால் கண்ணன்;
எழிலென்றால் கண்ணன்; எழுத்தென்றால் கண்ணன்;
தொழுதிடுவேன் கண்ணா உன்னை.