வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label வாரியார். Show all posts
Showing posts with label வாரியார். Show all posts

கள் மயக்கம் -1

வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா என்பது இன்னும் பலரை மயங்க செய்வது.
இதற்கு என்று ஒரு விதி இல்லாத காரணத்தால் நினைத்த படி எழுதுகின்றோம்.
இதைப் பற்றிய ஒரு பதிவு தான் இது.

கள் மயக்கம் என்றயுடன் நினைவிற்கு வருவது வாரியாரின் வரிகள்தான்.


கள் குடித்தால்தான்
போதை வரும் என்பதில்லை.
கள் என்று வாயால்
சொன்னால் கூட பலருக்கும்
மயக்கம் வந்துவிடும்.
நீ என்று ஒருமையில்
அழைப்பதற்கு பதில்
நீங்கள் என்று பன்மையில்
அழைத்துப் பாருங்கள் .உடனே
அவர் மயங்கி போவார்.
அதற்கு காரணம் நீங்கள் என்ற
சொல்லின் இருக்கும்
கள் தான்

மரியாதை கூட மனிதனை மயங்க வைக்கிறது.
மட்டுமல்ல உள்ளத்தையும் உவகை கொள்ள வைக்கிறது.