வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label Limeriaku. Show all posts
Showing posts with label Limeriaku. Show all posts

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3



காவலுக்குப் பூனை
கவிழ்ந்து கிடக்குது
சட்டி பானை






நிலவைத் தொட்ட விண்கலம் அங்கே
நீரிருப்பைச் சொன்னது
நீண்டவரிசையில் நிற்கும் மண்கலம் இங்கே






இறப்பும் இழப்பும் தந்தன காயங்கள்
இருந்தும் இருக்கின்றோம்
எல்லாம் காலச் சக்கரத்தின் மாயங்கள்





ஆண் ஆதிக்க அவலத்தால் பாஞ்சாலி
பந்தாயப் பொருளானாள் பாரதத்தில்
துகிலுரிந்த துச்சாதனனோ அங்கே பலசாலி






இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 5

அழுதான் நம்ம அப்பு
காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
போதலை யாம்தண்ணி மப்பு.





கம்பனுடன் கவிதை போச்சாம்
தமிழ் அன்னைக்குக் கருத்தடைச் சிகிச்சை
எங்கே வச்சு ஆச்சாம்?






ஆடிக் கிருத்திகை அரோகரா
போட்டுப் போனால் சென்னி மலைமேலே
கேட்டும் பாடல் " வசீகரா"






பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன்நண்டு வகையே அதிகம்.






குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த ஈரோடு தமிழன்பன் அவர்கள் எழுதியவை.

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2

இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.


இதோ என்னுடைய சில ஓசை ஒத்தப்பாக்கள் ( Limeriaku ).
உங்களின் பார்வைக்கு





விண்ணைத் தொடும் விலைவாசி
கண்ணைக் கட்டும் பொழுது
மண்ணில் யாரப்பா சுகவாசி.





திருடன் என்றால் கம்பு
அரசியல் வாதி என்றால்
நமக்கு ஏன் வம்பு.





அன்று மணத்தது பூக்கடையாய்
அரசியல், இன்றோ
அசுத்தம் நிறைந்த சாக்கடையாய்.





கருத்தும் கதையும்
மாறிப் போய் இன்று திரைப்படத்தில்
விரசமும் சதையும்.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 4

சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.









யானையின் பலம் தும்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி கிட்டும் வரையில்
நமக்கு வேண்டும் நம்பிக்கை.






வங்கிகள் கொடுக்கும் கடன்
வட்டிக் கணக்கை பார்த்த பின்னே
வேதனை வந்திடும் உடன்.





தஞ்சையில் அன்று தானியம்
செழித்தது காவிரி இன்று மணலாய்
உழவன் கெஞ்சுவது மானியம்.





குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3

இனிய மழலைப் பேச்சு
எப்பொழுதும் தோற்றுப் போகிறது.
என் மொழி வீச்சு.





உறங்க வில்லை மரங்கள்
உதிர்ந்த இலைகள் எல்லாம் அவற்றின்
பறிபோன பச்சை வரங்கள்.






மலையில் இருந்து அருவி
விழுவதைக் கண்டு தயங்குகிறது
குளிக்க நினைத்த குருவி.






நீண்ட கடற்கரை
ஆங்காங்கே படிந்துள்ளது
பொங்கிய கடல்நுரை.







குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2

பெண்ணுக்கு மூக்கு சப்பை
சொன்ன மாப்பிள்ளைக்கு
பெருத்து இருந்தது தொப்பை





பேருந்தில் போட்டார்கள் பாட்டு
கேட்ட சுகத்தில் தூங்கிப் போய்
வாங்க மறந்தேன் சீட்டு.





சாலை முழுவதும் மழைநீர்
முறையாக நாம் சேமித்தால், அதுவே
நாளை நமக்கான குடிநீர்.





கடத்தல் பொருள் பறிமுதல்
காணாமல் போனது
பாதுகாப்பில் பாதி முதல்.





குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1

நடுநிசியில் குழந்தையின் சத்தம்
கணவனுக்கு கிடைக்கவில்லை
மனைவியின் ஆசை முத்தம்






சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்.








தூரிகையெடு துளி மைத் தொடு
உயிரைத் தந்து உணர்வைக் கலந்து
ஓவிய மாக்கிக் கொடு.





நீரின்றி காயும் ஆறு
நித்தம் மணலெடுத்து குழி பறிக்கும்
மணல் வண்டி நூறு.





குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.