இடம் விட்டு இடம்...

இருக்க இடமிருந்தும்
இருக்க மனம்
இல்லாத மனிதர்கள்
இடம் விட்டு இடம் பெயர்ந்ததால்
இடுகாடாய்
மாறிப் போயின கிராமங்கள்



நகர்ந்து வந்த மனிதர்களால்
நகரங்களோ
நரகங்களாக‌
மாறிப் போயின.

ஒடிப் போன மழை
ஒட்டையாய்ப் போன ஒசோன்
இத்தனையும் ஏதனால் ?

இயற்கையின் மடியில்
தவழ வேண்டிய மனிதர்களோ
தடம் மாறி
இடம் மாறிப் போனதால் தானே





இருந்த இடத்திலே
இருந்த வண்ணம்
இயக்கக்கூடிய மின்பொத்தன்கள்





இடுப்பை வளைக்க‌
இயலா வண்ணம்
இருக்கும் இருக்கைப்பணிகள்

இப்படி
இடம் விட்டு இடம் நகராது
இருக்கும் இன்றைய வாழ்க்கை
இறுதியில் நடப்பது என்ன‌ ?

வசதி வேண்டி
வியர்வை சிந்த மறுக்கின்றோம்
விளைவு
வியாதிக்கு
விருந்தாகிப் போகின்றோம்




சனியும் குருவும்
இடம் விட்டு இடம் பெயர்ந்ததால்
இருள் விட்டுப் போகுமென்றும்
தலைவிதி மாறுமென்றும்
தவமாய்த் தவமிருப்போர்
தவற விடுவது என்ன‌ ?



பொன்னையும்
பொருளையும் கொடுத்துப்
பெற‌ முடியாத‌
கால‌த்தையும் நேர‌த்தையும்
மட்டுமல்ல‌


சாதனையாளர்களாக மாறி
சரித்திரத்தில்
இடம் பிடிக்க வேண்டியவர்கள்

சவங்களாகவே வாழ்ந்து
இறந்து விடுவதும் தானே




சலவை இயந்திரமும்
அரவை இயந்திரமும்
ஆட்சி செய்ய‌
ஆரம்பித்த யுடன்...

இடம் விட்டு
இடம் மாறிப் போனவை
தான் என்ன ?

அறிய வேண்டுமெனும்
ஆவல் இருப்பின்
அருட்காட்சியகத்தில்
போய்ப் பாருங்கள்



ஆட்டாங் கல்லையும்
அம்மிக் கல்லையும்
கட்டணம் செலுத்திக்
காணக் கூடிய‌
காலம் வரக் கூடும்.





( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான என்னுடைய கிறுக்கல்கள் )

Labels:

 
posted by திகழ் at 11:34 PM, | 12 comments

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3



காவலுக்குப் பூனை
கவிழ்ந்து கிடக்குது
சட்டி பானை






நிலவைத் தொட்ட விண்கலம் அங்கே
நீரிருப்பைச் சொன்னது
நீண்டவரிசையில் நிற்கும் மண்கலம் இங்கே






இறப்பும் இழப்பும் தந்தன காயங்கள்
இருந்தும் இருக்கின்றோம்
எல்லாம் காலச் சக்கரத்தின் மாயங்கள்





ஆண் ஆதிக்க அவலத்தால் பாஞ்சாலி
பந்தாயப் பொருளானாள் பாரதத்தில்
துகிலுரிந்த துச்சாதனனோ அங்கே பலசாலி






இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.

Labels: , ,

 
posted by திகழ் at 5:16 AM, | 0 comments

களம் ஒன்று ! கவிதை நூறு ! - 2



( மலர்விழி இளங்கோவன் அவர்கள் தலைமுறை இடைவெளி என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)

வடையைச் சுட்டது
பாட்டி என்கிறேன் நான்...

காக்கை என்கிறாய் நீ !

தலையாட்டுகிறேன்
மறந்தும் இவர்களிடம்
புன்செயில் என் தாத்தா
கடலை போட்டார்
என்பதை மட்டும்
சொல்லி விடக்கூடாது
என்று உறுதியோடு !


.............................................................................



(குகை மா.புகழேந்தி அவர்கள் கால விளக்கம் என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)


கைக்கிளைக்கும்
பெருந்திணைக்கும்
விள‌க்க‌ம் சொன்ன‌
தாத்தாவுக்கு
விள‌க்க‌ம் சொல்லிக்
கொண்டிருந்தான்
பேர‌ன்
கோமோவுக்கும்
லெஸ்பிய‌னுக்கும்

.................................................................

Labels: , , , ,

 
posted by திகழ் at 5:14 AM, | 0 comments

கவிதை எனப்படுவது யாதெனின்.......




( படித்ததில் பிடித்தது ‍ - வைரமுத்து அவர்களின் வெண்பாகள் )

புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்கிரண்டு கூட்டம் - ‍எதுகவிதை ?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவருக்குச் சொல்.

*********************************************


வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா - என்தோழா
போதைதர வன்று புதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு.

Labels: ,

 
posted by திகழ் at 5:12 AM, | 0 comments