வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

உழைப்பாளர் தினம்



சென்னை
ஒரு
தலைநகரம் மட்டுமல்ல‌
சிலைநகரமும் கூட.

இங்கே
உழைப்பாளர்கள்
சிலையில் கூட‌
உழைத்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள் !

தலைவர்கள்
சிலையில் கூட‌
பேசிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை மனநிறைவைக் கொண்டாட வேண்டிய நாள்.அவர்கள் மேன்மையுற பாடுபடுவோம் .

(பொன்.செல்வகணபதி அவர்களின் கவிதை)

தெய்வத் தமிழ்மாலை



முத்து நிகர்மாலை முன்வந் தருள்மாலை
சித்து நிறைமாலை செம்மொழிசெய் - பத்திநிறை
அம்பலவன் பேர்துதிக்கும் அன்புத் தமிழ்மாலை
சம்மத மாலையெனச் சாற்று.

பூமாலை நல்ல புகழ்மாலை போற்றியெனும்
பாமாலை பத்தி பகர்மாலை - மாமாலை
நெஞ்சில் நிறைமாலை நேர்கதி சொல்மாலை
பஞ்சாட் சரமாலை பாடு.

ஏற்ற புகழ்மாலை இனிய தமிழ்மாலை
கூற்றந் தவிர்மாலை குற்றமதை - மாற்றிவிடும்
போதத் தவமாலை புத்தமைதி கொண்டுலவும்
நாதமலை நம்மாலை நம்பு.

தேனாய் இனித்துத் திகழ்மாலை நம்மை
ஊனாய் உருக்கும் உயிர்மாலை - கானாற்று
வெள்ளமென நல்லருள் மேவுமாலை நம்பிக்கை
கொள்ளென்னும் பாமாலை பாடு.

ஓதுவார் நெஞ்சிலுறை ஒப்பற்ற பாமாலை
தீதுதவிர் தேவாரச் சீர்மாலை - மோதுபுகழ்
கொள்மாலை வெள்ளிமாலைக் கோன்மாலை நம்மிதயப்
புள்மாலை என்றே புகல்.

சாற்றும் மறைமாலை சந்தனச் சொல்மாலை
பொற்றற் குயர்மாலை பூமாலை - தோற்றம்
தருமாலை நம்மின் தொடர்மாலை நால்வர்
பெருமானார் சொல்மாலை பேசு.
..........................................................

வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்கள் எழுதிய தெய்வத் தமிழ்மாலை(வெண்பா அந்தாதி) என்னும் நூலில் எனக்குப் பிடித்த பாக்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

சித்திரைப் பெண்ணே வருக !



சித்திரைப் பெண்ணே வருக ! நல்ல‌
உத்தரவைக் கொண்டு வருக !

சித்திரைப் பெண்ணே வருக ! இன்பம்
இத்தரையில் பொங்க வருக !

சித்திரைப் பெண்ணே வருக ! நல்ல‌
புத்தியினை நாளும் தருக !

சித்திரைப் பெண்ணே வருக ! என்றும்
சத்தியமே வெல்ல வருக !

சித்திரைப் பெண்ணே வருக ! நமக்கு
அத்தனையும் அள்ளித் தருக !