வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

நாராயணனும் நாமும் ...



ஆண்டவன் என்பது
அறுசுவை விருந்து
அதை
உண்ண மறுப்பதால்
உண்டாகும் இழப்பு
நல்விருந்தாகிய
நாராயணனுக்கு இல்லை...

பாதிப்பு எல்லாம்
பல்சுவை என்னும்
பக்திப் பரவசத்தைப்
பருகும்
பாக்கியமற்றவர்களாக
போகும் நமக்கே !!!

நெருப்பிற்கு மட்டுமா ?



எரியும் நெருப்பிற்கு
எப்பொழுதும் தெரிவதில்லை
எரிவது எதுவென்று !!!

இயல்பு...




இயல்பாய்த் தான் இருக்கிறது
இருந்தாலும் அழகாய்த்தான் இருக்கிறது
இயற்கை !!!


வேண்டும் ! வேண்டும் !




இறந்தாலும் இருவிழியாலே
இவ்வுலகைக் காணவேண்டும்

இறந்தாலும் இவனாலே
இன்னலில்லை யெனவேண்டும்

இறந்தாலும் ஏதேனும்
செய்தேனும் இறக்கவேண்டும்

இல்லையெனில் இங்கேநான்
பிறவாமல் இருக்கவேண்டும்