வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3



காவலுக்குப் பூனை
கவிழ்ந்து கிடக்குது
சட்டி பானை






நிலவைத் தொட்ட விண்கலம் அங்கே
நீரிருப்பைச் சொன்னது
நீண்டவரிசையில் நிற்கும் மண்கலம் இங்கே






இறப்பும் இழப்பும் தந்தன காயங்கள்
இருந்தும் இருக்கின்றோம்
எல்லாம் காலச் சக்கரத்தின் மாயங்கள்





ஆண் ஆதிக்க அவலத்தால் பாஞ்சாலி
பந்தாயப் பொருளானாள் பாரதத்தில்
துகிலுரிந்த துச்சாதனனோ அங்கே பலசாலி






இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.

களம் ஒன்று ! கவிதை நூறு ! - 2



( மலர்விழி இளங்கோவன் அவர்கள் தலைமுறை இடைவெளி என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)

வடையைச் சுட்டது
பாட்டி என்கிறேன் நான்...

காக்கை என்கிறாய் நீ !

தலையாட்டுகிறேன்
மறந்தும் இவர்களிடம்
புன்செயில் என் தாத்தா
கடலை போட்டார்
என்பதை மட்டும்
சொல்லி விடக்கூடாது
என்று உறுதியோடு !


.............................................................................



(குகை மா.புகழேந்தி அவர்கள் கால விளக்கம் என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)


கைக்கிளைக்கும்
பெருந்திணைக்கும்
விள‌க்க‌ம் சொன்ன‌
தாத்தாவுக்கு
விள‌க்க‌ம் சொல்லிக்
கொண்டிருந்தான்
பேர‌ன்
கோமோவுக்கும்
லெஸ்பிய‌னுக்கும்

.................................................................

கவிதை எனப்படுவது யாதெனின்.......




( படித்ததில் பிடித்தது ‍ - வைரமுத்து அவர்களின் வெண்பாகள் )

புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்கிரண்டு கூட்டம் - ‍எதுகவிதை ?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவருக்குச் சொல்.

*********************************************


வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா - என்தோழா
போதைதர வன்று புதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு.

துளிப்பா (haiku) - 1


( படித்ததில் பிடித்தது - கவிஞர்களின் பலரின் கைவண்ணத்தில் எழுதப்பட்டவை )

சாதி வாழ்க ! சாதி வாழ்க‌
வாழ வேண்டமா
சாதித் தலைவர்

*************************

சேரிக்குள்
தினமும் வந்துபோகும் தேர்
சூரியன்

*************************

பாட்டி இறந்தும்
கூடவே இறந்துவிட்டன‌
கதைகள்

**************************

தண்ணீரைப் ப‌துக்கிய‌தால்
அரிவாள் வெட்டு
இள‌நீர் மீது

நண்பனின் கல்லூரிக் கவிதைகள்



வருத்தம்


வீரப்பனின் வீராப்பு குறித்து
தேவாரத்திற்கு வருத்தம்

தேவாரத்தின் கெடுபிடியைக் கண்டு
வீரப்பனுக்கு வருத்தம்

காவிரியில் தண்ணீர் விடுவதைப் பற்றி
பட்டேலுக்கு வருத்தம்

காவிரியில் தண்ணீர் விடாததைப் பற்றி
கலைஞருக்கு வருத்தம்

மழை வரவில்லையென்று
விவசாயிக்கு வருத்தம்

மழை வந்து விட்டதே என்று
உப்பு விற்பவனுக்கு வருத்தம்

தான் மட்டும் உள்ளே இருக்கிறோம்
என்று "சசி"க்கு வருத்தம்

த‌ன்னையும் உள்ளே வைத்துவிடுவார்க‌ளோ
என்று "ஜெ"க்கு வ‌ருத்த‌ம்
வருத்தம் !
வருத்தம் !
வருத்தம் !

உன் கடைக்கண் பார்வை கிட்டவில்லை என்று
அனைவருக்கும் வருத்தம்

உன்னை காணவில்லையே என்று
எனக்கு மட்டுமே வருத்தம்



காதல்


புரியாதவன்
தாடி வளர்க்கிறான்

புரிந்தவன் இன்னொரு
லேடியைப் பார்க்கிறான்

பேச்சுச் சுதந்திரம்



பேச்சுச் சுதந்திரம்
தந்தீர்
நாங்களும்
பேசு பேசென்று
பேசுகிறோம்.

விண்வெளியில்
ஓடிய‌
இரோகிணியைப்
ப‌ற்றிய‌ல்ல‌

வீட்டை விட்டு
ஓடிய‌
இரோகிணியைப்
ப‌ற்றி !

( படித்ததில் பிடித்தது - காண்டீபன் அவர்களின் வரிகள் )