வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

இடம் விட்டு இடம்...

இருக்க இடமிருந்தும்
இருக்க மனம்
இல்லாத மனிதர்கள்
இடம் விட்டு இடம் பெயர்ந்ததால்
இடுகாடாய்
மாறிப் போயின கிராமங்கள்



நகர்ந்து வந்த மனிதர்களால்
நகரங்களோ
நரகங்களாக‌
மாறிப் போயின.

ஒடிப் போன மழை
ஒட்டையாய்ப் போன ஒசோன்
இத்தனையும் ஏதனால் ?

இயற்கையின் மடியில்
தவழ வேண்டிய மனிதர்களோ
தடம் மாறி
இடம் மாறிப் போனதால் தானே





இருந்த இடத்திலே
இருந்த வண்ணம்
இயக்கக்கூடிய மின்பொத்தன்கள்





இடுப்பை வளைக்க‌
இயலா வண்ணம்
இருக்கும் இருக்கைப்பணிகள்

இப்படி
இடம் விட்டு இடம் நகராது
இருக்கும் இன்றைய வாழ்க்கை
இறுதியில் நடப்பது என்ன‌ ?

வசதி வேண்டி
வியர்வை சிந்த மறுக்கின்றோம்
விளைவு
வியாதிக்கு
விருந்தாகிப் போகின்றோம்




சனியும் குருவும்
இடம் விட்டு இடம் பெயர்ந்ததால்
இருள் விட்டுப் போகுமென்றும்
தலைவிதி மாறுமென்றும்
தவமாய்த் தவமிருப்போர்
தவற விடுவது என்ன‌ ?



பொன்னையும்
பொருளையும் கொடுத்துப்
பெற‌ முடியாத‌
கால‌த்தையும் நேர‌த்தையும்
மட்டுமல்ல‌


சாதனையாளர்களாக மாறி
சரித்திரத்தில்
இடம் பிடிக்க வேண்டியவர்கள்

சவங்களாகவே வாழ்ந்து
இறந்து விடுவதும் தானே




சலவை இயந்திரமும்
அரவை இயந்திரமும்
ஆட்சி செய்ய‌
ஆரம்பித்த யுடன்...

இடம் விட்டு
இடம் மாறிப் போனவை
தான் என்ன ?

அறிய வேண்டுமெனும்
ஆவல் இருப்பின்
அருட்காட்சியகத்தில்
போய்ப் பாருங்கள்



ஆட்டாங் கல்லையும்
அம்மிக் கல்லையும்
கட்டணம் செலுத்திக்
காணக் கூடிய‌
காலம் வரக் கூடும்.





( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான என்னுடைய கிறுக்கல்கள் )