இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )
1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.
இதோ என்னுடைய சில ஓசை ஒத்தப்பாக்கள் ( Limeriaku ).
உங்களின் பார்வைக்கு

வேதங்கள் முழங்க ஒலித்தது மந்திரம்
வேடிக்கை பார்த்தான் தமிழன், நடந்தது
வேள்வியில் தமிழை அழிக்கும் தந்திரம்


ஆரம்பம் ஆனது வாக்கு வேட்டை
கிடைத்தது என்னவோ
கடைசியில் மக்களுக்கு நெற்றியில் பட்டை.


வீட்டை விட்டு வனவாசம்
விதியை வெந்து என்ன பயன் ?
மதியை இழந்ததால் சிறைவாசம்.


பூக்களைக் கண்டு
தேன் எடுக்க துடிக்கிறது
வாலிப வண்டு.


பறந்தது உயிர்ப்பறவை
கூட்டை விட்டு, மறந்தது
தன் உறவை.


குறிப்பு ; இந்த இடுகையிலுள்ள படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை.