எப்பொழுதும் தோற்றுப் போகிறது.
என் மொழி வீச்சு.


உறங்க வில்லை மரங்கள்
உதிர்ந்த இலைகள் எல்லாம் அவற்றின்
பறிபோன பச்சை வரங்கள்.


மலையில் இருந்து அருவி
விழுவதைக் கண்டு தயங்குகிறது
குளிக்க நினைத்த குருவி.


நீண்ட கடற்கரை
ஆங்காங்கே படிந்துள்ளது
பொங்கிய கடல்நுரை.


குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.