வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

தமிழும் தமிழன்பன் அவர்களும்

(படித்ததில் பிடித்தது - ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை வரிகள் )



சீர்நிறைந்த அளவடியும் சீர்கு றைந்த
சிந்தடியும் வெண்பாவில் சேர்ந்தி ருக்கும் !
பாரினிலே நிதிநிறைந்தோர் அதுகு றைந்தோர்
பக்கத்தில் இருப்பதற்குச் சரியென் பாரா ?



முரண், பாட்டில் நயஞ்செய்யும் !
முன்னேறும் நாடோ
முரண்பாட்டில் தேய்ந்தழியும் !



ஒலிகுறைந்த உகரமுயிர் எழுத்துத் தான்ஓர்
ஒற்றெழுத்தாய் மாறாது ! " சந்த னக்கோல்
மெலிந்தாலும் சந்தனத்தான் ! பிரம்பா காது ! "
மேலோர்கள் கொட்டாலும் மேலோ ரேதாம் !




மொழிமுதலில் இடைகடையில் ஒலிகு றைந்தால்
முன்வந்து நெட்டெழுத்தே அளபெ டுக்கும் !
பழிவந்து தன்னினத்தின் புகழ்கு றைந்தால்
பைந்தமிழன் பேராண்மை தலையெ டுக்கும் !




அருங்கவியின் உயிரில்லா எழுத்தை எண்ணி
அலகிடுதல் இலக்கணத்தார் வழக்க மில்லை !
பெருமானம் அற்றவரை எண்ணிப் பார்க்கும்
பிழைச்செய்ல்கள் நுழைபுலத்தார் செய்வ தில்லை !
வருபாட்டில் அசைச்சொல்போல் பயனி ழந்து
வாழ்வதுமோர் வாழ்லாமோ ?