அவர்கள் " உய்ர்திணை உறவு " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )

சேர்ந்து மெதுவோட்டம் வந்த
செல்லநாய்
தள்ளிய கழிவை
சட்டத்திற்குப் பயந்து
தாள் பையில்
சேகரித்தபடியே
ஓரச் சாலையில்
ஓட்டம் தொடர்ந்தான்...
அருகிலிருக்கும்
முதியோர் இல்லத்திலிருந்து
அன்றாடம்
அவனைப் பார்த்து
ஆசுவாசம் கொள்ளும் தாய்
தனக்குள் சொல்லிக் கொண்டாள்
"இப்படித்தானே அள்ளினேன்
மழலையில்
இவன் விட்ட கழிவையும்... "

(இது சில நாட்களுக்கு முன் படித்த சப்பான் கவிதையை ,அப்படியே மொழியாக்கம் செய்துள்ளேன்.)
அன்றாடம் மெதுவோட்டம்
ஆச்சரியத்தில் அனைவரும் ...
எடைகுறைந்தது நாய்மட்டும் என்பதால் !
