வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

நீ வளர்ந்துவிட்டாய் !

சாப்பிடச் சொல்கிறேன்
நான்...

ஊட்டச் சொல்கிறாய்
நீ !



இன்னும் என்ன குழந்தையா ?
வயதிற்கேற்ற வளர்ச்சி வேண்டாமா ...
என்னிலிருந்து
வார்த்தைப் பொறிகள்
கோபச் சூட்டோடு !

உணவில்
உப்புத் தண்ணீர்
ஊற்றுகிறது ...
உன் கோபம் வழிந்து !




தொலைபேசியின் அழைப்பில்
கண் , நாசி துடைத்து ...
எடுத்து " அலோ " சொல்லி
காது கொடுக்கிறாய் ...

புன்னகை கொஞ்சும்
குரலில் ஒட்டிக் கொண்டு
மறுமொழிகிறாய் ...
" கொஞ்சம் சளி " என்று !

நீ வளர்ந்துவிட்டாய்
நான் தான் ...



இதோ ஊட்டிக் கொண்டுக்கிறேன்
பாசத்தையும் சேர்த்து
என் பதின்ம வயதுக்
குழந்தைக்கு !


( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் மலர்விழி இளங்கோவன்
அவர்கள் எழுதிய கவிதை )

புதையல்