காதலர்தின கிறுக்கல்கள் என்னும் தலைப்பில் யாழ் அகத்தியன் எழுதி இருக்கும் வரிகளைப் படித்துப் பாருங்கள்.
நீ பேசாமல் நின்றாலும்
பேசிக்கொண்டேதானே இருக்கிறது
இன்னும் என்னோடு உன் கண்கள்
இவ்வளவு கிட்ட வந்தபின்னும்
தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள்
தப்பா நினைக்க போறாங்க நாம்
நல்ல நண்பர்கள் என்று
உனக்கு முத்தம் கொடுக்க சொல்லி
சொன்னதே உன் கண்கள்தான் கொடுக்கும்
போதும் எதோ சொல்கிறதே
என்னவாக இருக்கும்?
நல்ல காலம் உன் கண் பேசும்
வார்த்தைகள் யாருக்கும் புரிவதில்லை
இல்லையேல் திட்டும் போதும் நான்
சிரித்துக் கொண்டே இருப்பதை
கண்டு பிடித்திடுவார்கள்
உனக்கான கவி நடையில்தான்
என் எழுத்துக்கள் இடையில்
கிறுக்கல் ஆகிறது
தயவு செய்து கோவத்தோடு
எனை விட்டு பிரியாதே
என் கோவத்தை யாரிடமாவது
காட்ட வேண்டி வந்துவிடும்
நம் முதல் சந்திப்பில்
காதல் வரவில்லை
நம் முதல் பிரிவில்த்தான்
காதல் வந்தது
இன்று காதலர்தினமாம்
யாரையாவது காதலிக்க விடுகிறாயா
நேற்றே வந்து விட்டாய்
-யாழ் அகத்தியன்
எத்தனை அருமையான வரிகள்
பிடித்ததும் கிடைத்ததும் என்னும் தலைப்பில் எழுதிய கிறுக்கல்களைப் படித்தால், இன்னும் படிக்கவேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாக்கும் .
பிடித்ததெல்லாம் கிடைத்துவிட்டால், அது
கிடைத்தபின் பிடிப்பதில்லை.
கிடைத்ததெல்லாம் பிடித்துவிட்டால், அது
பிடித்தபின் நிலைப்பதில்லை!!!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், அது
நடந்தபின், அதை நாம் நினைப்பதில்லை.
நடந்ததையே நினைத்திருந்தால், அது நாம்
நினைப்பதுபோல் நடக்க போவதில்லை!!!
இந்த தளத்திற்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரிகள் அருமையாக எழுதி உள்ளதைக் காண முடியும்.
நேசம் என்னும் தலைப்பில் MEERAN MYDEEN அவர்களின் வரிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
செடியின் முற்கள்
ஒரு பக்கம்
அழகிய ரோஜா
நிற்கும் மறு பக்கம்
பலா தோளின் முற்கள்
புற பக்கம்
இனிமை சுளா
இருக்கும் அக பக்கம்
கொட்டும் தேனீக்கள்
ஒரு பக்கம்
தித்திக்கும் தேன்
இருக்கும் அக பக்கம்
என் கருத்து வெளிபாடோ
சுடும் பக்கம்
என் அன்பு மனம்
ஏங்குவதோ
சுற்றும் உன் பக்கம்!
கிறுக்கல்களே நெஞ்சத்தை தைக்கின்றன. மறுப்பதற்கு இல்லை.
வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள
சில சமயங்களில் கிறுக்கி கிறுக்கல்களே
கீழே உள்ளவை.
வட்டப்பாதை ( orbit)

பெண்ணே
நீ என்
விழியில்
விழுந்த நாள் முதலாய்
என் வாழ்க்கை கூட
சூரியனாய்
சுற்றும்
வட்டப்பாதையானது
வதைக்காதே, உன்
வார்த்தைகளால் என்
வாட்டத்தை கொஞ்சம்
விலக்கிடு பெண்ணே
இருவழிப்பாதை(Two-way traffic)

பயணிக்கும் பாதை கூட
இருவழிப்பாதை என்றால்தான்
இனிக்கின்றது
இல்லையெனில்
இயங்க மறுக்கிறது
ஒருவழிப்பாதை என்றால்
ஒருவர் கூட பயணிப்பதில்லை.
திரும்பி வர வழி இல்லையெனில்
திரும்பி கூட பார்க்க மாட்டோம்
இழப்பிற்கும்
இறப்பிற்கும்
இடிந்து விடுவதா ?
வாழ்க்கை என்பது
இன்பமும் துன்பமும்
இணைந்து என்று நினைத்தால்
இறப்பை தேடும்
ஒருவழிப்பாதையை
ஒரு பொழுதும் தேர்ந்து எடுக்க மாட்டோம்.
வாழ்க்கை என்னும்
இருவழிப்பாதையில் பயணிப்போம்.
சொல் அகராதி
1.orbit - வட்டப்பாதை
2.two way traffic - இருவழிப்பாதை
3.one way traffic - ஒருவழிப்பாதை