எண்ணத் தோன்றுகிறது.இந்தக் குறளைக் காணும்பொழுது மகிழ்ச்சியில் மனம் திழைக்கிறது.
" நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு."
"நிலவரை " , " நீள்புகழ் " , " புலவர் " என்னும் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தால்,புதுப் புதுப் பொருள்கள் அரும்புவதைக் காணலாம். நீள்புகழுக்குரிய பெரும்புலவர் வள்ளுவர் " நிலவரை " என்னும் சொல்லை நமக்கு அருளியுள்ளார். அதுதான் landmark ஆகும்.
( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )
" வரை " சொல்லைக் கொண்டு வரையும் சொற் தொடர்கள் எத்தனை என்று எண்ணிப் பாருங்கள்.
" வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ? "
"கடைசி தமிழன் உயிருடன்
இருக்கும் வரை
இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். "
" மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது "
இந்த " வரை" என்னும் சொல்லைக் கொண்டு வரைந்த சொல் தான் " நிலவரை ".
இந்த " நிலவரை" என்னும் சொல்லுக்கு இதைவிட யாரும் பொழிப்புரை தர இயலாது.


சொல் அகராதி
1.landmark - நிலவரை