௯.சந்தியும் சந்திப்பும்
தொகுப்பு தமிழ் at 7:25 PMஓற்றுப் பிழையைச் சந்திப் பிழை என்றும் வழங்குவர். தன் காதல் கடித்தில் நேர்ந்துவிட்ட ஒரு சந்திப் பிழை குறித்துக் காதலன் ஒருவன் தன் காதலிக்கு எழுதும்
கடிதத்தை / கவிதையைக் கீழே காணலாம்.
"அன்பே !
உன் தந்தை
தமிழாசிரியராய் இருக்கத்
தகுதியே இல்லாதவர்
' ஆருயிர் காதலிக்கு '
என்று தொடங்கி
நான் உனக்கு எழுதிய காதல் கடிதத்தைக்
கள்ளத் தனமாய்ப் படித்தவர்
' சந்திப் பிழை '
என்றால் சரியென்றிருப்பேன்.
ஆனால், நம்
' சந்திப்பே ' அல்லவா பிழை என்கிறார் ? "
" ஆருயிர்க் காதலிக்கு " என்று ஒற்றிட்டு எழுத வேண்டிய தொடரை * " ஆருயிர் காதலிக்கு " என்று நான் எழுதியது தவறு தான் ; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் , பிழையான தமிழைத் திருத்த வேண்டி தமிழாசிரியராகிய உன் தந்தை நம் காதலுக்குத் தடை போடுகிறாரே ! " என்று எண்ணும் இளைஞனின் உள்ளத்தை/ ஏளனத்தை/ நையாண்டியை இந்தப் புதுக்கவிதை படம் பிடித்துக் காட்டுகிறது.
( மருதூர் அரங்கராசன் எழுதிய நூலிருந்து )
இந்த வரிகளைப் படிக்கும்பொழுதே முடிந்தவரை எழுத்துப் பிழையின்றி எழுதவேண்டும் என்னும் எண்ணத்தை என்னுள் விதைத்தது .
இந்தக் கவிதை தமிழின் மேல் ஒரு ஆர்வத்தை உண்டாக்குவதையும் உணர முடிகிறது.
புதையல்
-
▼
09
(74)
-
▼
1
(21)
- வண்டும் தமிழும்
- வளியும் தமிழும்
- வள்ளமும் தமிழும்
- புறவிறக்கமும் அகவேற்றமும்
- சொல்லும் நுட்பப் பொருளும்
- பிலம்
- landmark - நிலவரை
- maiden attempt - கன்னி முயற்சியா ?
- கட்டுப்பாடு யாருக்கு தான் பிடிக்கும்
- கள் மயக்கம் -1
- கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 2
- தமிழர்களின் அறிவு திரையரங்குகளின் அருகில் !
- பலாப்பழமும் பலகையும் - 2
- இதர என்பது தமிழ்ச் சொல்லா
- ௰௩.அவனைத் தூக்கிலே தொங்கவிட வேண்டும்
- ௰௨.மொழியாக்கத்தை யாரால் மட்டும் செய்ய முடியும்
- ௰௧.பலாப்பழமும் பலகையும் - 1
- ௰.சீம்பூ , சென்னை,சில சிந்தனைகள்
- ௯.சந்தியும் சந்திப்பும்
- ௮.கிறுக்கல்களும் சொல் அகராதியும் - 1
- ௭.குறும் பேழை ( Brief case )
-
▼
1
(21)